Pages

Friday, December 24, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-8)

 11

வத்தகுழம்பு, சுட்ட அப்பளம்,

மோருஞ்சா,நார்த்தங்காய் ஊறுகா என,

செரிமானமாகா புளிச்சேப்ப

சுக செளகரிய வாழ்வின் நடுவே,

திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்

கொண்டே

புராண, இதிகாச, தாந்ரீக, மாந்ரீகக்

கதைகள் சொன்ன நீயேதான்,

இன்று . . .

பத்திரமான பணியில், மாச ஊதியத்தில்

நிச்சயப் பென்சனில்,

காலாட்டிக் கொண்டு, கவிதை

செய்கிறாய்

என்றால் உனக்குக் கோபம் வரும்

என்ன செய்ய,

என்பிழைப்பு நாய்ப் பிழைப்பு

அன்று போலவே.


12

வார்த்தைகளைப் பிரிக்கிறாய்,

முரண்களை இணைக்கிறாய்,

எதயோ ஒளித்து வைத்திருப்பதாக

ஜாலம் பண்ணுகிறாய்.

எங்கு வாங்கினாய் இந்தப் பேனாவை?

வீசி எறி,

வாலிப வயோதிக அன்பர்களை

லாட்ஜ்க்கு அழைத்து லேகியம்

விற்கலாம்.

வாஸ்த்து, ராசிக்கல், பெயர் மாற்றம்,

கைரேகை,

எவ்வளவு இருக்கிறது!

ஏன் இப்படி கவிதை செய்கிறாய்?

உனக்கும் லாபம் இன்றி.

எனக்கும் லாபம் இன்றி.

வா. . . . .
லேகியம் விற்போம்.

2 comments:

  1. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அய்யோ சாமி தயவுசெய்து என் வலைப்பக்கம் வந்திடாதீங்க. பயமாயிருக்கு

    ReplyDelete

Friday, December 24, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-8)

 11

வத்தகுழம்பு, சுட்ட அப்பளம்,

மோருஞ்சா,நார்த்தங்காய் ஊறுகா என,

செரிமானமாகா புளிச்சேப்ப

சுக செளகரிய வாழ்வின் நடுவே,

திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்

கொண்டே

புராண, இதிகாச, தாந்ரீக, மாந்ரீகக்

கதைகள் சொன்ன நீயேதான்,

இன்று . . .

பத்திரமான பணியில், மாச ஊதியத்தில்

நிச்சயப் பென்சனில்,

காலாட்டிக் கொண்டு, கவிதை

செய்கிறாய்

என்றால் உனக்குக் கோபம் வரும்

என்ன செய்ய,

என்பிழைப்பு நாய்ப் பிழைப்பு

அன்று போலவே.


12

வார்த்தைகளைப் பிரிக்கிறாய்,

முரண்களை இணைக்கிறாய்,

எதயோ ஒளித்து வைத்திருப்பதாக

ஜாலம் பண்ணுகிறாய்.

எங்கு வாங்கினாய் இந்தப் பேனாவை?

வீசி எறி,

வாலிப வயோதிக அன்பர்களை

லாட்ஜ்க்கு அழைத்து லேகியம்

விற்கலாம்.

வாஸ்த்து, ராசிக்கல், பெயர் மாற்றம்,

கைரேகை,

எவ்வளவு இருக்கிறது!

ஏன் இப்படி கவிதை செய்கிறாய்?

உனக்கும் லாபம் இன்றி.

எனக்கும் லாபம் இன்றி.

வா. . . . .
லேகியம் விற்போம்.

2 comments:

  1. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அய்யோ சாமி தயவுசெய்து என் வலைப்பக்கம் வந்திடாதீங்க. பயமாயிருக்கு

    ReplyDelete