Pages

Tuesday, November 23, 2010

கதை கதையாம் காரணமாம்

                                         "ராட்ச்சனோட குகைய
                                         அக்காவும் தம்பியும் மெதுவா
                                         எட்டிப் பார்தாங்க,
                                         ராட்ச்சன் கொர்ர்...புர்ர்...ன்னு
                                         கொரட்டவுட்டுத் தூங்கிட்டு இருந்தான்...
                                        அவனோட கை ஒவ்வொன்னும்
                                         பனமரந் தண்டி இருந்திச்சி...
                                        காலு ஒவ்வொன்னும்
                                        ஆல மரந்தண்டி இருந்திச்சி...
                                        பல்லு மொறம் மாதிரி இருந்திச்சி...

                                        அங்கப் பார்த்தா... அண்டாஅண்டாவா
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        வாளிவாளியா சாம்பாரு... சட்டினி...
                                        அக்காவுநு தம்பியும் அவுக்கு அவுக்குன்னு
                                        தின்னாங்க...
                                        வயிறுமுட்டமுட்டத்தின்னாங்க...
                                        அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
                                        வேணுமேனிட்டு,,, ராட்ச்சனோட
                                        வேட்டி ஒன்ன எடுத்து
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        அல்லாத்தையும் மூட்டையாக்கட்டி
                                       அக்காக்காரி தலையில தூக்கிக்கிட்டா...
                                        தம்பி ரண்டு வாளிய எடுத்து
                                       சாம்பாரு... சட்டினிய ஊத்திக்கிட்டான்...
                                      அக்காவுந்தம்பியும் எடுத்தாங்க பாரு
                                       ஒட்டம்... வூடு வந்துதான் நின்னாங்க..."



                                        மூன்றாம் வகுப்புத் தோழிகளுக்கு
                                        நான்காம் வகுப்பு கமலி
                                        கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
                                        வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.

                                        எங்கோ கவனம் போல
                                        கதையைக் கவனித்துக்
                                        கொண்டிருந்த ஆசிரியை
                                        கமலியின் தலைவருடி
                                        "காலயில என்னம்மா சாப்பிட்ட?"
                                        என்றாள்
                                        "பழையது டீச்சர்" என்று
                                        பதில் வந்த்து.


      
                                                              
              - ப. பரிதிபாண்டியன்

Friday, November 19, 2010

ஓபாமா எங்க எம்.எல்.ஏ

      பள்ளிக் கூடத்துக்கு ஓபாமா வந்தார் எங்க கூட டான்ஸ் ஆடினார். அவரோட ஓய்ப்பும் எங்கக் கூட ஆடினாங்க சந்தோஷமா இருந்திச்சு.

 நேத்தைக்கு எங்க எம்.எல்.ஏ பள்ளியில புதுக்கட்டிடம் திறக்க வந்தார் நாங்க பூத்தட்ட வைச்சுக்கிட்டு வரிசையா நின்னோம்.எம்.எல்.ஏ வந்தோன்ன அவருமேல பூவ வீசிட்டு ஓன்னுக்கிருக்க அவசரமா ஓடினோம்.
                                                            

           பேசாம ஒபாமாவே
எங்க எம்.எல்.ஏ வா
இருந்திருக்கலாம்....



                                                              ப.பரிதிபாண்டியன்

Tuesday, November 16, 2010

மனுஷ்ய ‌மைந்தர்களுக்கும் இன்ன பிற கவிதாஜீவிகளுக்கும் கவி சீ‌ரோன் மணிகளுக்கும்

உன்னிடம் அவனிடம் அவளிடம்
உவனிடம் உவளிடம்
எவனிடமாகிலும் எவளிடமாகிலும்
‌‌சொல்ல நி‌னைக்கி‌‌றேன்
‌சொல்லி விடலாம் என்‌றே நி‌னைக்கி‌‌றேன்
எவ்வளவு தந்திரமாக
இருக்கி‌றேன்
எவ்வளவு தந்திரமாக
கவி‌தை ‌செய்கி‌றேன் என்று.
எந்த இருக்கை எனக்கானது
தந்திரமாக ‌யோசிக்கி‌றேன்

நிச்சயமான மனிதர்கள்
உத்தரவாதமான பணயங்கள்
 முத்தங்களின் புரிதல்கள்
‌வெளிச்சப் பகல்கள்
தந்திரமான காரியங்களின்
உலகம் இது.

‌‌வேசியர் விடுதிகள்
கட்டணக் கழிப்ப‌றைகள்
திறந்த ‌வெளி‌மைதானங்கள்
வீடுகளின் படுக்‌கைய‌றைகள்
வகுப்ப‌றை ‌பெஞ்சுகள்
பணியிட நாற்காலிகள்
எல்லாவற்றிலும்
என் இருக்‌கை
தந்திரமாக இருக்கிறது.

‌வேசியர் விடுதி‌யோ
கட்டணக் கழிப்ப‌றை‌யோ
இவற்‌றை விட
கவி‌தை ‌மோசமானதில்‌லை

தந்திரமாக ‌யோசிக்கவும்
மந்திராம் ‌போல் வார்த்‌தைக‌ளைக்
‌கோர்க்கவும்
‌தெரிந்திருக்க ‌வேண்டும்
மட்டு மல்லாது
ஒரு பதிப்பகமும்
மாத ‌வெளியீ‌டொன்றும்
இருப்பின்
நீயும் கவி‌ஞனடா.....
அடா; அடா;அடடா;
நாலல்ல, நாற்பதல்ல, நானுறு பக்கம்
கவி‌தை     செய்யலாம்
                     பெய்யலாம்
                     நெய்யலாம்
                     ‌தைக்கலாம்
                     ‌வெட்டலாம்
                     ஒட்டலாம்
                     கி‌‌ழிக்கலாம்

                    பாரதி 
                                    மன்னித்துவிடு
                                                     நான் தந்திரமாகக்                
                                   கவி‌தை‌செய்பவன்...

Tuesday, November 23, 2010

கதை கதையாம் காரணமாம்

                                         "ராட்ச்சனோட குகைய
                                         அக்காவும் தம்பியும் மெதுவா
                                         எட்டிப் பார்தாங்க,
                                         ராட்ச்சன் கொர்ர்...புர்ர்...ன்னு
                                         கொரட்டவுட்டுத் தூங்கிட்டு இருந்தான்...
                                        அவனோட கை ஒவ்வொன்னும்
                                         பனமரந் தண்டி இருந்திச்சி...
                                        காலு ஒவ்வொன்னும்
                                        ஆல மரந்தண்டி இருந்திச்சி...
                                        பல்லு மொறம் மாதிரி இருந்திச்சி...

                                        அங்கப் பார்த்தா... அண்டாஅண்டாவா
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        வாளிவாளியா சாம்பாரு... சட்டினி...
                                        அக்காவுநு தம்பியும் அவுக்கு அவுக்குன்னு
                                        தின்னாங்க...
                                        வயிறுமுட்டமுட்டத்தின்னாங்க...
                                        அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
                                        வேணுமேனிட்டு,,, ராட்ச்சனோட
                                        வேட்டி ஒன்ன எடுத்து
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        அல்லாத்தையும் மூட்டையாக்கட்டி
                                       அக்காக்காரி தலையில தூக்கிக்கிட்டா...
                                        தம்பி ரண்டு வாளிய எடுத்து
                                       சாம்பாரு... சட்டினிய ஊத்திக்கிட்டான்...
                                      அக்காவுந்தம்பியும் எடுத்தாங்க பாரு
                                       ஒட்டம்... வூடு வந்துதான் நின்னாங்க..."



                                        மூன்றாம் வகுப்புத் தோழிகளுக்கு
                                        நான்காம் வகுப்பு கமலி
                                        கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
                                        வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.

                                        எங்கோ கவனம் போல
                                        கதையைக் கவனித்துக்
                                        கொண்டிருந்த ஆசிரியை
                                        கமலியின் தலைவருடி
                                        "காலயில என்னம்மா சாப்பிட்ட?"
                                        என்றாள்
                                        "பழையது டீச்சர்" என்று
                                        பதில் வந்த்து.


      
                                                              
              - ப. பரிதிபாண்டியன்

Friday, November 19, 2010

ஓபாமா எங்க எம்.எல்.ஏ

      பள்ளிக் கூடத்துக்கு ஓபாமா வந்தார் எங்க கூட டான்ஸ் ஆடினார். அவரோட ஓய்ப்பும் எங்கக் கூட ஆடினாங்க சந்தோஷமா இருந்திச்சு.

 நேத்தைக்கு எங்க எம்.எல்.ஏ பள்ளியில புதுக்கட்டிடம் திறக்க வந்தார் நாங்க பூத்தட்ட வைச்சுக்கிட்டு வரிசையா நின்னோம்.எம்.எல்.ஏ வந்தோன்ன அவருமேல பூவ வீசிட்டு ஓன்னுக்கிருக்க அவசரமா ஓடினோம்.
                                                            

           பேசாம ஒபாமாவே
எங்க எம்.எல்.ஏ வா
இருந்திருக்கலாம்....



                                                              ப.பரிதிபாண்டியன்

Tuesday, November 16, 2010

மனுஷ்ய ‌மைந்தர்களுக்கும் இன்ன பிற கவிதாஜீவிகளுக்கும் கவி சீ‌ரோன் மணிகளுக்கும்

உன்னிடம் அவனிடம் அவளிடம்
உவனிடம் உவளிடம்
எவனிடமாகிலும் எவளிடமாகிலும்
‌‌சொல்ல நி‌னைக்கி‌‌றேன்
‌சொல்லி விடலாம் என்‌றே நி‌னைக்கி‌‌றேன்
எவ்வளவு தந்திரமாக
இருக்கி‌றேன்
எவ்வளவு தந்திரமாக
கவி‌தை ‌செய்கி‌றேன் என்று.
எந்த இருக்கை எனக்கானது
தந்திரமாக ‌யோசிக்கி‌றேன்

நிச்சயமான மனிதர்கள்
உத்தரவாதமான பணயங்கள்
 முத்தங்களின் புரிதல்கள்
‌வெளிச்சப் பகல்கள்
தந்திரமான காரியங்களின்
உலகம் இது.

‌‌வேசியர் விடுதிகள்
கட்டணக் கழிப்ப‌றைகள்
திறந்த ‌வெளி‌மைதானங்கள்
வீடுகளின் படுக்‌கைய‌றைகள்
வகுப்ப‌றை ‌பெஞ்சுகள்
பணியிட நாற்காலிகள்
எல்லாவற்றிலும்
என் இருக்‌கை
தந்திரமாக இருக்கிறது.

‌வேசியர் விடுதி‌யோ
கட்டணக் கழிப்ப‌றை‌யோ
இவற்‌றை விட
கவி‌தை ‌மோசமானதில்‌லை

தந்திரமாக ‌யோசிக்கவும்
மந்திராம் ‌போல் வார்த்‌தைக‌ளைக்
‌கோர்க்கவும்
‌தெரிந்திருக்க ‌வேண்டும்
மட்டு மல்லாது
ஒரு பதிப்பகமும்
மாத ‌வெளியீ‌டொன்றும்
இருப்பின்
நீயும் கவி‌ஞனடா.....
அடா; அடா;அடடா;
நாலல்ல, நாற்பதல்ல, நானுறு பக்கம்
கவி‌தை     செய்யலாம்
                     பெய்யலாம்
                     நெய்யலாம்
                     ‌தைக்கலாம்
                     ‌வெட்டலாம்
                     ஒட்டலாம்
                     கி‌‌ழிக்கலாம்

                    பாரதி 
                                    மன்னித்துவிடு
                                                     நான் தந்திரமாகக்                
                                   கவி‌தை‌செய்பவன்...