Pages

Wednesday, February 23, 2011

நூறு முட்கள் குத்தட்டும்



 முள் 1
           தலைவனின் கடைசி ஆசையும்
                                     நிறைவேற்றப்பட்டது
           புறம் போக்கு நிலத்தில்
                                 புதைக்கப்பட்டு.



முள் 2

             தலைவன் கேட்டான்
                             தன் கலைலறைக்கு
                             அழகிய வாசகம் ஒன்று,
             '' எச்சரிக்கை... சகல வில்லங்கங்களும்
                 இங்கே புதைக்கப்பட்டுள்ளது ''
          என்று எழுதித் தரப்பட்டது.



முள் 3

    தமிழய்யாவைப் பார்க்கச் சென்றேன்
   ' தமிழரசி' அவர் மகள் சொன்னாள்
   '' டாடி... வீட்ல இல்ல, அங்கிள் ''



Thursday, February 17, 2011

வலி

சின்ன வயதில்
ஒரே கனவு அடிக்கடி வரும்
நிறைய நிறைய பானைகளில்
நிறைய நிறைய சோறு இருப்பதாகவும்
தின்று கொண்டே இருப்பதாகவும்
எப்படி இது . . . அன்று முழுக்கப் பட்டினி.
இன்று என் மகன்
தட்டில் சோற்றைப் பிசைந்து
முகம் சுளித்து ஒதுக்கி வைக்கும் போது
நெஞ்சில் வலி பரவுகிறது.

Sunday, February 6, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-10)

         16
உன்னை அலட்சியப்படுத்தலாம்,
ஒதுக்கிச் செல்லலாம்,
பக்கத்தை அப்படியே புரட்டி விடலாம்
எல்லாம் சரிதான்
நானல்லவா இருபது முப்பது
கொடுத்துப் புத்தகம் வாங்கினேன்.
ஒரு கிலோ அரிசி வாங்கி வரும் பெண்
அதில் கிடக்கும் கல்,கருப்பரிசி
பொறுக்கி மாளாது
திட்டடுவாள். கேட்டிருக்கிறாயா?
நாய் குறுக்கே போகது.
அவளை விடவும் அசிங்க வசவுகள்
அறிவேன் நான்.
என்ன செய்ய,நீ எதிரில் இல்லை.
தவிரவும்,
எழுதும்போது நாகரிகம் காக்க
வேண்டியுள்ளது.
நான், நீ அல்லவே.

Wednesday, February 23, 2011

நூறு முட்கள் குத்தட்டும்



 முள் 1
           தலைவனின் கடைசி ஆசையும்
                                     நிறைவேற்றப்பட்டது
           புறம் போக்கு நிலத்தில்
                                 புதைக்கப்பட்டு.



முள் 2

             தலைவன் கேட்டான்
                             தன் கலைலறைக்கு
                             அழகிய வாசகம் ஒன்று,
             '' எச்சரிக்கை... சகல வில்லங்கங்களும்
                 இங்கே புதைக்கப்பட்டுள்ளது ''
          என்று எழுதித் தரப்பட்டது.



முள் 3

    தமிழய்யாவைப் பார்க்கச் சென்றேன்
   ' தமிழரசி' அவர் மகள் சொன்னாள்
   '' டாடி... வீட்ல இல்ல, அங்கிள் ''



Thursday, February 17, 2011

வலி

சின்ன வயதில்
ஒரே கனவு அடிக்கடி வரும்
நிறைய நிறைய பானைகளில்
நிறைய நிறைய சோறு இருப்பதாகவும்
தின்று கொண்டே இருப்பதாகவும்
எப்படி இது . . . அன்று முழுக்கப் பட்டினி.
இன்று என் மகன்
தட்டில் சோற்றைப் பிசைந்து
முகம் சுளித்து ஒதுக்கி வைக்கும் போது
நெஞ்சில் வலி பரவுகிறது.

Sunday, February 6, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-10)

         16
உன்னை அலட்சியப்படுத்தலாம்,
ஒதுக்கிச் செல்லலாம்,
பக்கத்தை அப்படியே புரட்டி விடலாம்
எல்லாம் சரிதான்
நானல்லவா இருபது முப்பது
கொடுத்துப் புத்தகம் வாங்கினேன்.
ஒரு கிலோ அரிசி வாங்கி வரும் பெண்
அதில் கிடக்கும் கல்,கருப்பரிசி
பொறுக்கி மாளாது
திட்டடுவாள். கேட்டிருக்கிறாயா?
நாய் குறுக்கே போகது.
அவளை விடவும் அசிங்க வசவுகள்
அறிவேன் நான்.
என்ன செய்ய,நீ எதிரில் இல்லை.
தவிரவும்,
எழுதும்போது நாகரிகம் காக்க
வேண்டியுள்ளது.
நான், நீ அல்லவே.